கல்வி நிலைய மரணங்கள்...
“ முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்ற அடிப்படையில் அவள் தொல்லைகளுக்கு உட்படுவாளோ என நாங்கள் அஞ்சினோம் . என்ன செய்வது ?? அவள் பெயர் ஃபாத்திமா லத்தீஃப் என்றாகி விட்டதே ” – சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீஃப் மரணத்தை அடுத்து , அவரது தாயார் சுஜிதா நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தான் இவ்வாறு தெரிவித்திருந்தார் . எத்தனை வலி நிறைந்த வார்த்தைகள் இவை . அடையாளங்களை மறைத்து கொண்டு வாழும் நிலைக்கு ஒரு பிரிவினரை இந்த சமூகம் தள்ளியிருக்கிறது என்பது எவ்வளவு கொடூரமானது . தற்கொலை செய்வது ஒன்றும் அத்தனை எளிதானது கிடையாது . வாழ்வின் மீதான தீராத வெறுப்பை நோக்கி தள்ளப்படுகிற ஒரு இதயத்தால் மட்டுமே , தற்கொலையை தீர்வாக கருத முடிகிறது . தற்கொலையே தீர்வு என கருதுகிற அளவுக்கு ஒரு இதயம் செல்கிறது என்றால் , அது எவ்வளவு காயப்படுத்தப்பட்டிருக்கும் ? எண்ணற்ற கனவுகளை சுமந்து கொண்டு , எங்கோ ஒரு கிராமத்தில் இருந்து , ஒடுக்குமுறைகள் அனைத்தையும் முட்டி மோதி எழுந்து , இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் என போற்றப்படுகிற ஐஐடியில் இடம் கிடைத்து வந்து சேர்கிற ஒருவனோ , ஒருத்தியோ செத்து போய்விடலாம் என எண்ணத் த